திருவண்ணாமலை அருகே பெரிய ஏரியை சீரமைக்க அரசு சார்பில் 29லட்சம் நிதி ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொளத்தூர் கிராமத்தில் 516 ஏக்கர் கொண்ட பெரிய ஏரியில், தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 29லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரிபாசனம் மூலம் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் எனவும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்றும் கூறப்படுகிறது. நீர்வரத்து தடையின்றி வர வழிவகை செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version