லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 இருசக்கர வாகனங்கள் சேதம்

கரூரில் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது.

டெல்லயிலிருந்து திண்டுக்கல், பொள்ளாச்சியில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு விநியோகம் செய்ய மின்சார பேட்டரியால் இயங்க கூடிய 28 இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்டயாம்பரப்பு எனும் இடத்தில் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட தகவலின் பேரில் தீ ஆணைக்கப்பட்டது. அதற்கு லாரியில் இருந்த 28 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது. இதனுடைய மதிப்பு 18 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மின்சாரத்துடன் இயங்க கூடிய பேட்டரிகள் இணைக்கப்பட்டிருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version