மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

ஈரானில் மது குடித்தால் கொரோனா வராது என்ற நம்பிக்கையில் மது அருந்திய 27 பேர் உயிரிழந்தனர்…

இஸ்லாமிய நாடான ஈரானில் பிற மதத்தினர் மது அருந்த அனுமதிஉள்ளது. இந்த நிலையில் தென்மேற்குப் பகுதியில் உள்ள குஸஸ்தான் மாகாணத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதனால் மது அருந்தினால் கொரோனாவின் பாதிப்பு இருக்காது என சிலர் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து மெத்தனால் என்ற எரிசாராயத்தை ஏராளமானோர் அருந்தி உள்ளனர். அடுத்த சில மணிநேரங்களில் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்ட அவர்கள்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 27 பேர் உயிரிழந்தனர்.218 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version