சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து 27 லட்சம் ரூபாய் பறிப்பு

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பணப்பரிமாற்ற நிறுவனத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி மர்ம நபர்கள் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் கடையில் இருந்த மூன்று பேரை வாகனத்தில் தீவுத்திடலுக்கு அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.  27 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை அங்கேயே விட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version