சபரிமலை எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 பெண்கள் பயணம்

சபரிமலை எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் 26 பெண்கள் பயணமாகியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில், எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என கூறி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கமலா என்ற பெண் தலைமையில், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 26 பேர் எரிமேலிக்கு பயணமாகியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கமலா, எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு பெண்கள் செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

Exit mobile version