இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 26 வங்க தேசத்தினர்கள் கைது

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 26 பேரை எல்லை காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கோனாவிலுள்ள இந்திய – வங்கதேச எல்லையில் சட்ட விரோதமாக ஊடுருவ வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் முயற்சித்தினர். இது தொடர்பாக 26 பேரை எல்லை காவல் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் தீவிரவாதிகள் யாரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Exit mobile version