திருவாரூரில் இசை நிகழ்ச்சிகளால் களைக்கட்டிய சங்கீத மும்மூர்த்திகளின் 252 ஆவது ஜெயந்தி விழா

திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அனுராதா கிருஷ்ணமூர்த்தியின் பாட்டு கச்சேரி நடைபெற்றது.

திருவாரூரில் மாவட்டத்தில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் 252வது ஜெயந்தி விழா நடைபெற்றது. தியாகராஜர் திருக்கோவிலில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில், அனுராதாகிருஷ்ணமூர்த்தி குழுவினரின் பாட்டு கச்சேரியும், அக்கரை சகோதரிகள் என்ற அழைக்கப்படும் எஸ், சுப்புலட்சுமி, எஸ்.சொர்ணலதா குழுவினரின் வயலின் கச்சேரியும் நடைபெற்றது. இதில் ஏராளமான இசை பிரியர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version