நாமக்கல் நடந்த தடகளப் போட்டிகளில் 2,500 மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் நடந்த தடகளப் போட்டிகளில், குமாரபாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெற்றனர். தனியார் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில், சேலம், நாமக்கல், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து, இரண்டாயிரத்து 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில், குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 7 மாணவர்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version