இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் தமிழக கடற்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய கடலோர காவல் படையினர் நாகை அருகே கடலில் ரோந்து சுற்றி வந்தபோது துறைமுகத்தில் இருந்து சுமார் 45 நாட்டிகல் மைல் தொலைவில் இலங்கை மீன்பிடி படகுகள் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் எல்லை தாண்டி வந்து இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 25 பேரை கைது செய்து அவர்களின் 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேரிடமும் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

Exit mobile version