230 சவரன் கொள்ளை – 4 பேர் கைது

பழைய பல்லாவரம் கார்டன் உட்ரோப் நகரில் வசித்து வரும் தனியார் வங்கி மேலாளர் யோக சேரன் வீட்டில் 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் நுழைந்தது. வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் கட்டிப் போட்ட அந்தக் கும்பல் 230 சவரன் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிச் சென்றது. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், மதுரை கரிமேடு பகுதியில் 4 பேரை கைது செய்தனர். கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வங்கி அதிகாரி வீட்டு வேலைக்காரியிடம் போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version