2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு – பிரதமர் மோடி

2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் கல்வித்துறை சார்பில் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வித்துறையில் முதலீடு செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரைஸ் எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

Exit mobile version