ஈரோடு மாவட்டம் மலையம் பாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இதனருகே 200 ஆண்டுகள் பழமையான மிக பிரம்மாண்டமான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் கடுமையான வெப்பம் காரணமாக மரத்தின் காய்ந்த பகுதிகளில் பற்றி எரியத் தொடங்கிய தீ மெதுவாக மரம் முழுவதும் சூழ்ந்தது.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.