“முகக்கவசம் அணியாத ஊழியர்களுக்கு 200 ரூபாய் அபராதம்!”

சென்னை தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாத ஊழியர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதன்மைச் செயலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாமலும் நடந்துக் கொள்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதே போன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாவிட்டால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதன்மைச் செயலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலக வளாகத்தை சுற்றியுள்ள பொது இடங்களில் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் எச்சில் உமிழ்ந்தாலோ, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற தவறினாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version