கல்விக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 16,260 ரூபாயை வழங்கிய கொரோனா நிவாரணமாக 2 வயது சிறுமி!!!

சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி, தனது ஆரம்ப படிப்பிற்காக சேர்த்து வைத்திருந்த 16 ஆயிரம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் – சண்முகப்பிரியா தம்பதியின் மகள் ஆதினி. இவர் தனது ஆரம்ப கல்விக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 16 ஆயிரத்து 260 ரூபாயை, கொரோனா நிவாரண நிதியாக ஆட்சியர் ஜான் லூயிஸிடம் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வரும் நிலையில், 2 வயது சிறுமியும் தனது சேமிப்பு பணத்தை வழங்கி ஆதரவு கரத்தை நீட்டியுள்ளார்.

Exit mobile version