அனுமதி இன்றி சவுடு மண் கடத்திய 2 லாரி ஓட்டுநர்கள் கைது

நாகை அருகே, அனுமதி இன்றி மண் கடத்திய இரண்டு லாரி ஓட்டுநர்களை போலீசார் கைது செய்து , வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், நண்டலாறு காவல் சோதனை சாவடியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்ததில், அவற்றில், உரிய அனுமதி இன்றி புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு சவுடு மண் கடத்த இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 2 லாரிகளையும் சவுடு மண்ணுடன் பறிமுதல் செய்த காவல்துறையினர், வாகன ஓட்டுநர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version