சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீதான தற்கொலைப்படை தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் மரணம்

 ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் 70 வாகனங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2 ஆயிரத்து 500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பேருந்துகள் மீது பதுங்கி இருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக்கூட்டம் இன்று கூடுகிறது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான  சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்  எண்ணிக்கை தற்போது  44 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version