விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்கள்: கண்களை தானமாக வழங்கிய பெற்றோர்

மதுரை அருகே விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் கண்களையும், அவர்களது பெற்றோர் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெருங்குடியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் செல்லப்பாண்டி. தந்தையை இழந்த நிலையில், ஒத்தக்கடையிலுள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்தார். அவருடனேயே பள்ளிக்குச் சென்றுவந்த தனியார் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் விகாஷ். இருவரும் மிதிவண்டி ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த விகாஷ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே உயிரிழந்த செல்லப்பாண்டியின் கண்களையும், விகாஷின் கண்களையும் அவர்களது பெற்றோர் தானம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version