சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 மாடிக் கட்டடம் இடிந்து 10 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம், முகமதாபாத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம், மாவு மாவட்டத்தில் முகமதாபாத் என்னுமிடத்தில் 2 மாடிக் கட்டடத்தின் ஒரு குடியிருப்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றி பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்திலும் இடிபாடுகளிலும் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version