2 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்காத ராகுல்!

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடந்த 21-ஆம் தேதி அன்று நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் நடைற்றது. மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஹரியானாவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பெறவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்காதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version