டேராடூனில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி

டேராடூனில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மலை பகுதியில் டிராக்டர் ஒன்று சென்றுள்ளது. அந்த டிராக்டர் அங்கிருந்த பாலத்தை கடந்தபோது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை பகுதி என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எத்தனை பேர் டிராக்டரில் சென்றனர் என்பது குறித்த தகவல் தெரியாததால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version