தமிழகத்தில் 2 புதிய மாநகராட்சிகள் உதயம்

தமிழகத்தில் ஓசூர், நாகர்கோவிலை புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இதை தாக்கல் செய்தார்.

இதேபோல், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக உரிமை ரத்து செய்யப்படும் என்று சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version