காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்!!

காஷ்மீரின் பாராமுல்லாவில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாராமுல்லாவின் நவ்காம் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாதுகாப்புப் படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் அதிகமான தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version