இளம்பெண்ணை காதலித்தவர் கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இளம்பெண்ணை காதலித்தவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த 2 பேருக்கு, நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடலூரை அடுத்த குட்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்த அருள், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், காதலியை சந்திப்பதற்காக, அருள் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த பெண்ணின் சகோதரர் ரகு, முருகன் மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி ஆகியோர் அருளை கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அருள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, முருகன் மற்றும் ரகுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.  ராஜகுமாரிக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Exit mobile version