2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற முதியவர் பிடிபட்டார்

மதுரையில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் 2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற முதியவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

மதுரை கோமதிபுரத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்ற அப்துல் ரஹ்மான் என்ற முதியவர், கடை உரிமையாளரிடம் ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்ததாகக் கூறி ஊழியர்களிடமிருந்து பணத்தை திரும்ப வாங்கிச் சென்றுள்ளார். ஊழியர்கள் இதுபற்றி கடை உரிமையாளரிடம் கூறிய போது, தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என மறுத்துள்ளார். இந்த நிலையில், கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்த்த போது அவர்கள் அதிச்சி அடைந்தனர். தங்களை ஏமாற்றி பணத்தை வாங்கிச் சென்ற முதியவர், கடையில் இருந்து 2 கிலோ வெங்காயத்தை திருடி செல்லும் காட்சி அதில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை மீண்டும் கடைக்கு வந்த முதியவரை, கையும் களவுமாகப் பிடித்த ஊழியர்கள், அவரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version