முகநூலில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்த 2 பேர் அடுத்தடுத்து கைது

கோவையில், சிறார் ஆபாச படங்கள் பதிவிறக்கம் மற்றும் பார்த்தவர்கள் என அடுத்தடுத்து இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முகநூலில் சிறார் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்த வழக்கில், பொள்ளாச்சியில் தங்கி வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், கோவையில், தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக வேலை செய்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர், அவர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில், சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version