வேலூரில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

வேலூரில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

சோளிங்கரை அடுத்த சித்தூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேற்கு போர்டின் தெரு ஆகிய இரு இடங்களில், மதுபானம் விற்பனை நடைபெறுவதாக ராணிப்பேட்டை சார் ஆட்சியருக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து, சோதனை மேற்கொண்ட அவர் மதுபானம் விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 201 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Exit mobile version