மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.8 கிலோ தங்கம் பறிமுதல்

மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 2.8 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த ஒரு பெண் உட்பட 12 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 9. 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version