ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 1,800 கன அடியாக நீடிப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் நீர் வரத்து தொடர்ந்து 5வது நாளாக வினாடிக்கு  1,800 கன அடியாக நீடித்து வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்த காரணத்தால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. அதன்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து தொடர்ந்து 5வது நாளாக வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடியாக நீடித்து வருகிறது.
 
நீர் வரத்து குறைந்தும், அருவியில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 156வது நாளாக நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version