18 எம்.எல்.ஏக்கள் வழக்கு – சபாநாயகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து வெற்றிவேல் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நேற்று தீர்ப்பளித்தார். மேலும் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த இருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் என்பதால், சபாநாயகர் தனபால் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version