தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு – தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் முடிவு

உயர்நீதிமன்ற 3 வது நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 பேரை, பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றாலத்திலிருந்து மதுரை சென்ற எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். இதில், தேர்தலை சந்திப்பதா அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்யலாம் என பெரும்பாலானோர் தெரிவித்தனர். கூட்டதில் எடுத்த முடிவை தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Exit mobile version