கும்பகோணத்தில் பகவத் விநாயகருக்கு 18 லட்ச ரூபாய் பணத்தாள்களால் அலங்காரம்

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பகவத் விநாயகருக்கு 18 லட்ச ரூபாய் பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள பகவத் விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பத்து நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பகவத் விநாயகருக்கு 18 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகரைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Exit mobile version