18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் -தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்தும், 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.துரைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.ஜி. கணேசமூர்த்தி, டி.ஜி.பி அலுவலக ஐ.ஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர மத்திய குற்ற பிரிவு டி.ஐ.ஜியாக வி.பாலகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.பி.எஸ் அதிகாரி செந்தில்குமாரி, ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜியாகவும், சென்னை மேற்கு சரக போக்குவரத்து காவல் துணை ஆணையராக தீபா கணிகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version