ஸ்ரீதியாகராஜரின் 172வது ஆராதனை விழா

கர்நாடக இசையில் கீர்த்தனைகள் பாடிய, ஸ்ரீதியாகராஜரின் 172வது ஆராதனை விழா மங்கள இசையுடன் தொடங்கியது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக்கரையில் பிறந்து, கீர்த்தனைகள் பாடிய சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் 172-வது ஆராதனை விழா மங்கள இசையுடன் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒன்றாக இணைந்து தியாகராஜரின் கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்துகின்றனர். அதனை முன்னிட்டு வருகிற அந்நாளில் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version