தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 17,000 கன அடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரியில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியில் இருந்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நொடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 16ஆவது நாளாகத் தடை நீடிக்கிறது.

Exit mobile version