17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவான திமுக பிரமுகரை தேடும் காவல்துறை

சென்னை அருகே17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவான திமுக பிரமுகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் கர்ப்பமான சிறுமியை, மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரில், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கட்டிட தொழிலாளி கார்த்திக், புதுமாப்பிள்ளை மணிகண்டன் ஆகியோரை போக்ஸோவில் கைது செய்தவர்கள், முக்கிய குற்றவாளியான திமுக இணையதள பொறுப்பாளர் தனசேகரனை தேடி வருகின்றனர்.

Exit mobile version