இந்திய மீனவர்கள் 16 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 16 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். சர்வதேச கடல் எல்லையில், மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்துள்ளனர்.

2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த அவர்கள், கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், இந்திய மீனவர்களை கராச்சிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Exit mobile version