16 கூடுதல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் உதவி ஆணையர்கள் இரண்டு பேர் உட்பட 89 டி.எஸ்.பி நிலை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பாலசுப்ரமணியன் உட்பட 16 கூடுதல் கண்காணிப்பாளர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஒரேநாளில் 105 காவல் துறை அதிகாரிகளை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version