15வது பாரம்பரிய கலைத் திருவிழா: மெய்சிலிர்க்க வைக்கும் நடன நிகழ்ச்சிகள்

ஒடிசாவில், 15-வது பாரம்பரிய திருவிழா உற்சாகத்துடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் தொடங்கிய இவ்விழா,3 நாட்கள் நடைபெறுகிறது. நாட்டின், பாரம்பரிய கலைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில், அம்மாநில சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. நடனம், தற்காப்பு உள்பட பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். பழமை வாய்ந்த கலைகளை, தங்களுக்கே உரிய தோரணையில், கலைஞர்கள் அரங்கேற்றி வருவது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Exit mobile version