லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழப்பு

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 150 பேர் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 62 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

லிபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் 300க்கும் மேற்படோர் படகுகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வரும் நிலையில், 62 பேரின் உடல்கள் லிபியாவின் கடற்கரை பகுதியான கோம்ஸில் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். வான்வழி தாக்குதலால், சிரியாக, லிபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளியேறும் நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்தாண்டின் மிக மோசமான கடல் விபத்து என வருத்தம் தெரிவித்துள்ளது.

Exit mobile version