லாரி டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நரசிப்பட்டினத்தில் லாரியின் டீசல் டேங்கில் மறைத்து வைத்துக் கொண்டு செல்லப்பட்ட 150 கிலோ கஞ்சாவைக் கலால் வரித்துறையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர். 

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிப்பட்டினத்தில் கலால் வரித்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு லாரியை மடக்கிச் சோதனை செய்தனர். லாரியின் அடிப்புறத்தில் ஒருபக்கம் டீசல் டேங்க் இருந்த நிலையில் மற்றொரு பக்கமும் டீசல் டேங்க் போல் ஒரு பெட்டி இருந்ததைக் கண்டனர். அதற்குள் 150 கிலோ கஞ்சா மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். 

Exit mobile version