15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என்றும், முக கவசங்கள் அணியத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, மக்கள் நல்வாழ்த்துறை தொடர்ந்து நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு, பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Exit mobile version