திருப்பூரில் 15 ஆயிரம் பனைவிதை நடும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குட்டையை தூர்வாரி 15 ஆயிரம் பனைவிதை நடும் நிகழ்வு, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமையில் நடைபெற்றது.

காங்கேயம் அருகே பலசமுத்திரம், புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கத்தாக்கண்ணி கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் குட்டையை தூர்வாரும் பணி நடைபெற்றது .இதில் வேளாண்மை துறைசார்பில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைவிதைகளை நடவு செய்ததோடு, அங்குள்ள சீமை கருவேல மரங்களையும் அகற்றினர். பொதுமக்களுடன் இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும் இப்பணியை மேற்கொண்டனர். மேலும் பனை மரங்களின் சிறப்பு குறித்து மாணவ மாணவியர்களுக்கு வேளாண்துறை சார்பில் விளக்கிக் கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியை காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமை தாங்கினார்.

Exit mobile version