144 தடை அமலில் உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற கம்யூ.தலைவர்கள் தடுத்து நிறுத்தம்

144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீ நகர் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்தி நிறுத்தினர். ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்குள் நுழைய முயன்று தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது கம்யூனிஸ்ட் தலைவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version