குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 14 மாத குழந்தை பலாத்கார வழக்கு

குஜராத்தில் இந்தி பேசும் மக்கள் வெளியேற காரணமாக இருந்த குழந்தை பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா அருகே கடந்த மாதம் 29-ம் தேதி, 14 மாத பெண் குழந்தையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றது.

இதனால் உயிருக்கு பயந்த இந்தி பேசும் தொழிலாளர்கள் 20,000 பேர் அங்கிருந்து வெளியேறினர். இதற்கிடையில், சம்பவத்தில் ஈடுபட்டவரை குஜராத் மாநில போலீசார் தேடி வந்தனர். அந்த நபர், பீகாரில் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற குஜராத் போலீசார் குறிப்பிட்ட நபரை கைது செய்தனர்.

அணில் குமார் என்கிற 22 வயது வாலிபரை மேல் விசாரணைக்காக குஜராத் அழைத்து சென்றுள்ளனர்.

Exit mobile version