ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் ஆன்மிக நிகழ்ச்சியின் போது பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர், 24-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜசோல் எனும் இடத்தில் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த போது இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. எதிர்பாராத விதமாக ஆன்மிக நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் சரிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 24-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பந்தல் சரிந்து விழுந்த போது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழப்பு அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது துர்திஷ்டவசமான சம்பவம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version