பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக டெல்லியில் 14 பேர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சோதனைகளின் அடிப்படையில் 14 பேரை டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள், அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கூறப்படுகிறது. இவர்கள் 14 பேரும் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Exit mobile version