14 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு

 

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருப்பூரைச் சேர்ந்த சரஸ்வதி , மழையின் காரணமாக அறுந்து கிடந்த கம்பியைத் தொட்டதில் உயிரிழந்த தஞ்சையைச் சேர்ந்த ஆனந்தி உள்பட 14 பேர் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version