13வது ஐபிஎல்: 332 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 13-வது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும். இதற்கான, ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றனர். இதில் 713 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 258 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இறுதிப் பட்டியலில் 332 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 186 பேர் இந்தியர்கள், 143 பேர் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் மற்றும் மூன்று வீரர்கள் இணை நாடுகளைச் சேர்ந்த உள்ளனர்.

கொல்கத்தாவில் டிசம்பர் 19ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறவுள்ள ஏலத்தில் 73 இடங்களை நிரப்ப, எட்டு உரிமையாளர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version