சபரிமலையில் தரிசனத்திற்காக133 பெண்கள் ஆன்லைனில் பதிவு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய வழங்கிய முந்தைய தீர்ப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 133 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பெண்கள் வருவதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் கோயில் முழுவதும் 5 கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வன்முறை நிகழலாம் என உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது

Exit mobile version