ஓசூர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 13 காட்டுயானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 13 காட்டு யானைகள், ஒன்னல்வாடி ஏரியின் அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ளநிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சானமாவு வனப்பகுதியில் இருந்த ஒருக்குட்டி யானை உட்பட 13 காட்டு யானைகள் ஒன்னல்வாடி ஏரி அருகே உள்ள தைலந்தோப்பில் முகாமிட்டுள்ளதை தொடர்ந்து வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், யானைக்கூட்டத்தைக் காண வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version